×

திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர் நலத்துறை சோதனையில் 24 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை..!!

நெல்லை: திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர் நலத்துறை சோதனையில் 24 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடையளவு சட்டத்தின் கீழ் நிறுவனங்கள், நகைக்கடைகள் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். முறையாக எடைக்கற்கள் வைத்திருக்காத கடைகள், மறுபரிசீலனை சான்று வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பொட்டலங்கள் மீது காலாவதி தேதி, எடை போன்றவை இல்லாத கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர் நலத்துறை சோதனையில் 24 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Tenkasi Labor Welfare Department ,Nellai ,Tirunelveli, ,Tenkasi ,labor welfare department ,Tirunelveli, Tenkasi ,Dinakaran ,
× RELATED கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட...